Regional02

சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

செய்யாறு அருகே மாட்டு வண்டி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மோரணம் கிராமத்தில் வசித்தவர் சதீஷ் குமார்(21). இவர், சென்னை அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள செல்போன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், தனது வீட்டில் இருந்து கடந்த 19-ம் தேதி இரவு இரு சக்கர வாகனத்தில், ராந்தம் கிராமத்துக்கு வந்துள்ளார். ராந்தம் கூட்டுச்சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற மாட்டு வண்டி மீது இரு சக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் சதீஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மோரணம் காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT