Regional02

கரோனாவால் சேலம் டிஎஸ்பி உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

கரூரில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த காவல் துணை கண்காணிப்பாளர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் (48). இவர் சேலத்தில் கைரேகை பிரிவில் காவல் துணை கண் காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார். கரோனாவால் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த வாரம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

SCROLL FOR NEXT