Regional01

ஈரோட்டில் 1568 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது : சேலத்தில் 650 பேருக்கு கரோனா :

செய்திப்பிரிவு

ஈரோட்டில் நேற்று உச்சபட்சமாக 1568 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் ஆயிரத்தைக் கடந்து வருகிறது. சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 1568 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை பெற்று வந்த 669 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்றால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் தற்போது கரோனா தொற்று காரணமாக 7652 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சேலம் மாவட்டத்தில் நேற்று 650 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், சேலம் மாநகராட்சி பகுதியில் 342 பேரும், நகராட்சி பகுதிகளில், ஆத்தூரில் 13 பேரும், மேட்டூரில் 6, நரசிங்கபுரத்தில் 2, வட்டார அளவில் மகுடஞ்சாவடியில் 41, ஓமலூரில் 32, சேலத்தில் 27, வீரபாண்டியில் 28, சேலத்தில் 27, சங்ககிரி, அயோத்தியாப்பட்டணத்தில் தலா 20, தலைவாசலில் 17, வாழப்பாடியில் 16, எடப்பாடியில் 15, பனமரத்துப்பட்டியில் 14, ஆத்தூரில் 13, நங்கவள்ளியில் 11, கெங்கவல்லியில் 8 பெத்தநாயக்கன்பாளையத்தில் 6, என மாவட்டம் முழுவதும் 650 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT