Regional01

மாளிகைமேட்டில் அகழ்வாராய்ச்சி பணிகள் நிறுத்தம் :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகே யுள்ள மாளிகைமேடு பகுதியில் முதற்கட்ட அகழாய்வு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. இப்பணி களை 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்டு தொல்லியல் துறையினர் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா முழு ஊரடங்கு காரணமாக, மாளிகை மேட்டில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகள் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT