Regional01

நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக 1,240 படுக்கை வசதிகள் உள்ளன. இதில், 800 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி உள்ளது. இம்மருத்துவமனையில் தற்போது,13 ஆயிரம் கிலோ லிட்டர் மற்றும்6 ஆயிரம் கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட கொள்கலன்களில் ஆக்சிஜன் இருப்பு வைக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஆக்சிஜன் தேவை அதிகமாகியது. திரவ ஆக்சிஜன் இருப்புகுறைந்து வருவதால், தமிழ்நாடுமெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் மூலமாக, மகேந்திரகிரியிலுள்ள ஐஎஸ்ஆர்ஓ திரவஇயக்க உந்தும வளாகத்திலிருந்து கடந்த வாரம் ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டது. நேற்றும், 3 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் அவசரமாக கொண்டு வரப்பட்டது.

SCROLL FOR NEXT