Regional02

நெல்லை, தென்காசியில் கரோனாவுக்கு 11 பேர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் நேற்று 385 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 847 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 198 பேர் உட்பட இதுவரை 12 ஆயிரத்து 275 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,366 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனவால் பாதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் தென்காசி மாவட்டத்தில் மொத்த உயிரிழப்பு 206 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல், திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று 668 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 547 ஆகஉயர்ந்துள்ளது. நேற்று 891 பேர் குணமடைந்தனர். இதுவரை 26 ஆயிரத்து 557 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 3,721 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்த உயிரிழப்பு 269 ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி

கோவில்பட்டி

மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த53 வயது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார். கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பணியாற்றி வந்த 58 வயது தபால்காரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றியவரும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.

கன்னியாகுமரி

SCROLL FOR NEXT