Regional01

தஞ்சை, திருச்சியில் ஒரே நாளில் 1,677 பேருக்கு கரோனா தொற்று :

செய்திப்பிரிவு

மத்திய மண்டலத்தில் அதிகபட்ச மாக தஞ்சாவூரில் 857 பேருக்கும், திருச்சியில் 820 பேருக்கும் நேற்று புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூரில் 105, கரூரில் 292, நாகப்பட்டினத்தில் 392, பெரம் பலூரில் 133, புதுக்கோட்டையில் 208, தஞ்சாவூரில் 857, திருவாரூரில் 338, திருச்சியில் 820 பேருக்கு புதிதாக நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், திருச்சி யில் 12, தஞ்சாவூரில் 7, கரூரில் 4, நாகப்பட்டினத்தில் 2, புதுக்கோட்டை, திருவாரூரில் தலா ஒருவர் என மொத்தம் 27 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரி ழந்துள்ளனர்.

SCROLL FOR NEXT