கரோனா தொற்று பரவல் தீவிரமடைந்ததால் மே 10 முதல் மே 24-ம் தேதி வரை முழு ஊரடங்கை மாநில அரசு அறிவித்துள் ளது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்வதற்காக, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கமான பிற்பகல் நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு இரவு 9 மணி வரை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்க அனுமதியளிக்கப்பட்டது.
அதே சமயம், முழு ஊரடங்கு நாட்களில் மதியம் 12 மணி வரை பால், காய்கறி, மளிகைக் கடைகள் திறந்திருக்கும் என அறிவித் திருந்தும், வீடுகளுக்குத் தேவை யான காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக நேற்று ஏராளமான பொதுமக்கள் காந்தி மார்க்கெட்டில் குவிந்தனர். இதே போல பெரிய கடைவீதியிலும் கூட்ட நெரிசல் காணப்பட்டது.
பெரும்பாலான இடங்களில் சமூக இடைவெளி பின்பற்றப்பட வில்லை. முகக்கவசம் அணிவதி லும் பலர் அலட்சியமாக இருந்தனர். இதனால் கரோனா தொற்று எளிதில் பரவக்கூடிய நிலை காணப்பட்டது. இருந்தபோதிலும் இப்பகுதிகளில் கரோனா கட்டுப்பாடு விதிகளை முழுமையாக அமல்படுத்த மாநகராட்சி அதிகாரிகளோ, காவல்துறையினரோ போதிய நடவடிக் கைகளை மேற்கொள்ளவில்லை.