நாகர்கோவிலில் கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் வீடுகள் தோறும் சுகாதாரத்துறை சார்பில் கபசுபரக் குடிநீர் வழங்கப்பட்டது. 
Regional01

நெல்லை, தென்காசி, குமரியில் கரோனாவுக்கு 19 பேர் மரணம் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் 691 பேருக்கு புதிதாக நேற்று கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் மட்டும் 332 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்:

அம்பாசமுத்திரம்- 64, மானூர்- 45, நாங்குநேரி- 40, பாளையங்கோட்டை- 63, பாப்பாக்குடி- 4, ராதாபுரம்- 33, வள்ளியூர்- 75, சேரன்மகாதேவி- 20, களக்காடு- 15.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நாளுக்குநாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதுடன் உயிரிழப்பும் அதிகளவில் நிகழ்ந்து வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் நேற்று 6 பேரும், தென்காசி மாவட்டத்தில் 4 பேருமாக மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் 280 பேருக்கு நேற்று கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

கன்னியாகுமரி

இந்நிலையில் கரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுவரை 90,491 பேருக்கு முதல் கட்ட தடுப்பூசியும், 31,698 பேருக்கு இரண்டாம்கட்ட தடுப்பூசியும் செலுத்தப் பட்டுள்ளது.

கரோனா தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் வகையில் குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

SCROLL FOR NEXT