Regional01

பணியாளர்களுக்கு கரோனா தொற்றால் கொடைக்கானல் வனத்துறை அலுவலகம் மூடல் :

செய்திப்பிரிவு

கொடைக்கானலில் கரோனா தொற்று பாதிப்பு தினசரி கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கொடைக்கானலைச் சேர்ந்த 115 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கொடைக்கானல் வனத்துறை அலுவலகத்தில் 40-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணிபுரியும் நிலையில், அதில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அலுவலகம் நேற்று தற்காலிகமாக மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை வனத்துறை அலுவலகம் மூடப்பட்டிருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT