திருநெல்வேலி மாவட்டத்தில் 639 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு நேற்று உறுதியானது. இதில் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் மட்டும் 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வட்டாரம் வாரியாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை விவரம்:
அம்பாசமுத்திரம்- 10, மானூர்- 46, நாங்குநேரி- 63, பாளையங்கோட்டை- 70, பாப்பாகுடி- 1, ராதாபுரம்- 20, வள்ளியூர்- 87, சேரன்மகாதேவி- 23, களக்காடு- 31. கரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர்.
பாளையங்கோட்டை மண்டலம்23-வது வார்டுக்கு உட்பட்ட பெருமாள் சந்நிதி தெருவில் கடந்த 2 வாரத்தில் 11 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதனால் இந்த தெருவில் உள்ள வீடுகள், கடைகளில்கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பாளையங்கோட்டை மார்க்கெட், தபால் நிலையம், வங்கிகள், அரசு அலுவலகங்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
தென்காசி
தூத்துக்குடி
கன்னியாகுமரி
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கரோனாநோயாளிகளுக்கான 450-க்கும்மேற்பட்ட படுக்கைகள் நிரம்பியுள்ள நிலையில், 1000-க்கும்மேற்பட்டோர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் தடுப்பூசிக்கு தட்டுபாடு நிலவுகிறது.