கோவையின் முதல் பாஜக வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், வானதி சீனிவாசன்.
கோவை தெற்குத் தொகுதியில் கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் 33,113 வாக்குகளைப் பெற்று டெபாசிட்டை தக்கவைத்தார். அதைத்தொடர்ந்து, நடப்பு 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக, கோவை தெற்கு தொகுதியை கேட்டுப் பெற்றது. வானதி சீனிவாசன் வேட்பாளராக அறிவிக்கப் பட்டார்.
தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே கோவை வந்து கொடிசியாவில் நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார். பின்னர், உத்தரப்பிரதேச முதல்வர்யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் வானதிசீனிவாசனை ஆதரித்து நேரடியாக பிரச்சாரம் மேற்கொண்டனர். கோவை தெற்கில் பாஜக, மநீம, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியதால் ஆரம்பம் முதலே இந்த தொகுதி மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வந்தது.கோவையில் பாஜக சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் 1998,1999 என இருமுறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். ஆனால், எம்எல்ஏக்கள் யாரும் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.
இருப்பினும், இந்த தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுக வுக்கு உள்ள வலிமையான வாக்கு வங்கியுடன், கோவையில் தங்களுக்கு சொந்த செல்வாக்கும் இருப்பதை பாஜகவினர் கூடுதல் பலமாக கருதினர். அதை மெய்ப்பிக்கும் விதமாக தேர்தல் முடிவும் அமைந்தது.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனைவிட 1,728வாக்குகள் அதிகம் பெற்று வானதிசீனிவாசன் வெற்றிபெற்று கோவையின் முதல் பாஜக எம்எல்ஏ என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.
கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் கூறும்போது, “ஆக்கப்பூர்வ மான வகையில் எந்தெந்த வகையில்எல்லாம் மத்திய அரசின் உதவியைப் பெற முடியுமோ, அந்த வகையில் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றுவோம்.
மக்களுக்கு உதவி செய்வ தைத்தான் இந்த நேரத்தில் வெற்றிக் கொண்டாட்டமாக பார்க்கிறோம்” என்றார்.