Regional02

கஞ்சா விற்ற இளைஞர் கைது :

செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் லாலாபேட்டை அருகே உள்ள பிள்ளபாளையத்தைச் சேர்ந்தவர் கோகுல்(24). இவர், தனது பெட்டிக்கடையில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக லாலாபேட்டை போலீஸாருக்கு வந்த தகவலை அடுத்து, லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் மோகன் நேற்று முன்தினம் பெட்டிக்கடையில் சோதனை நடத்தினார். இதில், பெட்டிக்கடையில் இருந்த 1.100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கோகுல் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தார்.

SCROLL FOR NEXT