Regional01

மத்திய மண்டலத்தில் 1,170 பேருக்கு கரோனா தொற்று :

செய்திப்பிரிவு

திருச்சி மத்திய மண்டலத்தில் நேற்று புதிதாக 1,170 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக திருச்சியில் 359 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

அரியலூர் 47, கரூர் 84, நாகப்பட்டினம் 201, பெரம்பலூர் 17, புதுக்கோட்டை 77, தஞ்சாவூர் 283, திருவாரூர் 102, திருச்சி 359 என மொத்தம் 1,170 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நாகப்பட்டினத்தில் 2, பெரம்பலூர், தஞ்சாவூரில் தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

SCROLL FOR NEXT