கடையநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் முஹம்மது அபூபக்கர், தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லத்துரை ஆகியோர் தென்காசி மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேசினர்.
இதுகுறித்து முஹம்மது அபூபக்கர் எம்எல்ஏ கூறும்போது, “தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொடிக்குறிச்சியில் உள்ள யுஎஸ்பி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் அவ்வப்போது மின்தடை காரணமாக இயங்குவதில்லை.
இதுவரை 3 முறை மின்தடை காரணமாக கேமராக்கள் இயங்காமல் இருந்துள்ளன. இதுபோன்ற நிலை ஏற்படாமல் செய்ய வேண்டும். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸார் முறையாக கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளோம்” என்றார்.
பூங்கோதை எம்எல்ஏ மனு