Regional02

25 கிலோ : கஞ்சா பறிமுதல் :

செய்திப்பிரிவு

தி.மலை சமுத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவ தாக கிடைத்த தகவலின்பேரில், தி.மலை குற்ற நுண்ண றிவு பிரிவு காவல்துறையினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள குப்பை கிடங்கில் கிளறியபோது, 25 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1.25 லட்சமாகும்.

இது குறித்து சிறப்பு பிரிவு காவல்துறையினர் கொடுத்த தக வலின் பேரில் தி.மலை நகர காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும், அவர்கள் வழக்குப் பதிவு செய்து, கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 4 பேரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT