திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் ‘சித்திரை வசந்த உற்சவம்’ பந்தக்கால் முகூர்த்ததுடன் நேற்று முன்தினம் மாலை தொடங்கியது.
இதையடுத்து, வரும் 26-ம் தேதி வரை மண்டகபடி உள்ளிட்ட பூஜைகளுடன் நடைபெற்று வருகின்றன. விழாவின் நிறைவாக, தீர்த்தவாரி மற்றும் மன்மத தகனம் போன்ற நிகழ்வுகள் நடை பெறவுள்ளன. இந்நிலையில், சித்திரை வசந்த உற்சவத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக...
பக்தர்கள் நலன் கருதி....
அரசு வழிகாட்டு நடை முறையின்படி, பக்தர்கள் நலன் கருதி பக்தர்களை அனுமதிக்காமல், மேற்கண்ட நாட்களில் யதாஸ்தானத்திலேயே அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.