Regional02

ஜாலியன் வாலாபாக் நினைவு தின பேரணி :

செய்திப்பிரிவு

சுதந்திரப் போராட்டத்தின் போது, பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக்கில் நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தூத்துக்குடியில் தேசிய மாணவர் படை (கடற்படை பிரிவு) சார்பில், கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடி ரோச் பூங்காவில் புறப்பட்ட பேரணிக்கு, தமிழ்நாடு தேசிய மாணவர் படையின் கடற்படை பிரிவு கட்டளை அதிகாரி சுரேஷ் கே. ராமரெட்டி தலைமை வகித்தார். புனித லசால் மேல்நிலைப் பள்ளி வழியாக பேரணி சென்று காமராஜ் கல்லூரியில் நிறைவுபெற்றது.

கடற்படை உதவி கட்டளை அதிகாரி நிஷாந்த் சிங், ஆசிரியர்கள் வடிவேல் முருகன் (காமராஜ் கல்லூரி), நிஷாந்தி (வஉசி கல்லூரி) மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT