கிருஷ்ணகிரி அணையில் இருந்து 2-ம் போக சாகுபடிக்காக, கூடுதலாக 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமகவுண்டர் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
கிருஷ்ணகிரி அணையில் இருந்து 2-ம் போக சாகுபடிக்காக, இடது மற்றும் வலது புறக்கால்வாய்கள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கபட்டு, நேற்றுடன் நிறைவடைகிறது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2-ம் போக நெல் சாகுபடி முழுமையாக முடிய இன்னும் 12 நாட்கள் தண்ணீர் தேவைப்படுகிறது. அப்போது நெற்கதிர்கள் முழுமையாக அறுவடை செய்ய முடியும். ஆகவே, தடையின்றி மேலும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.