Regional02

இரு தரப்பினர் மோதலில் 5 பேர் கைது :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர், தான் புதிதாக கட்டியு ள்ள வீட்டுக்கு சுண்ணாம்பு அடிப் பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரிடம் நாற்காலி ஏணி வாங்கியுள்ளார். நீண்ட நாட்களாகியும் அதனை திருப்பிக் கொடுக்காததால் குமார் தரப்பைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் தனது நண்பர்கள் 4 பேருடன் சென்று, கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளுது.

இதுகுறித்து இரு தரப்பினரும் குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மணி, செண்பகம், கருப்பசாமி, மாரியப்பன், ராமையா ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT