Regional02

கார் மோதி தொழிலாளி உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

சங்கரன்கோவில் அருகே உள்ள புளியம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (50), கட்டிடத் தொழிலாளி. இவர், சங்கரன்கோவில்- திருவேங்கடம் சாலையிலிருந்து வாணியர் ஊருணியையொட்டி உள்ள தெரு வழியாக சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது, எதிரே வந்த கார் மோதியதில் பலத்த காயம் அடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சங்கரன்கோவில் டவுன் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT