சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், வாக்களிக்க வரும் கட்சியினர், வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரியும் முகவர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
அதன்படி, வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்குச்சாவடிக்குள் கட்சியின் பெயர், சின்னம் பதித்த சால்வைகள் அணியக்கூடாது.
அதேபோல, மையத்துக்குள் முழக்கங்கள் எழுப்பக்கூடாது. வெயிலுக்கு அணியும் தொப்பியிலும் எந்தவித சின்னங்களும் இடம்பெறக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.