திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு 259 மடக்கு சக்கர நாற்காலிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
பாளையங்கோட்டையில் உள்ள காதுகேளாதோர் மேல் நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து சக்கர நாற்காலிகள் அனுப்பி வைக்கப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் வே.விஷ்ணு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வசதியாக 259 வாக்குச்சாவடி மையங்களுக்கு தலா ஒரு மடக்கு சக்கர நாற்காலி அனுப்பி வைக்கப்படுகிறது. வரும் 3-ம் தேதிக்குள் இப்பணிகள் அனைத்தும் முடிவுபெறும்.
மேலும் வாக்குச்சாவடி மையத்தின் நுழைவு வாயில் மற்றும் வாக்குச்சாவடி அறையின் நுழைவு வாயில் ஆகிய இடங்களில் சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது.
சக்கர நாற்காலியில் அமர்ந்து எளிதில் வாக்களிக்கும் வகையில் போதுமான இடத்துடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் நிறுவுவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறைவான உயரத்திலேயே வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் வாக்களி ப்பது தொடர்பாக உதவி பெற 7598000251 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
ஆலோசனை கூட்டம்
மணிவண்ணன், மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள் பங்கேற்றனர்.
ரூ.71 லட்சம் பறிமுதல்
தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் 1950 என்ற சேவை எண்ணில் இதுவரை 1789 தகவல்கள் பெறப்பட்டுள்ளன.