Regional03

அதிமுக ஆட்சியில் - விவசாயிகளுக்கு பாதுகாப்பில்லை : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கனிமொழி எம்பி தெரிவித்தார்.

திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அனிதாஆர்.ராதாகிருஷ்ணனை ஆதரித்துஉடன்குடி பஜாரிலும், வைகுண்டம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜை ஆதரித்து ஆழ்வார்திருநகரி மற்றும் ஏரலிலும் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி நேற்று பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:

தமிழகத்தில் எதிர்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் மக்கள் நலப் பணிகளுக்கு ஆளுங்கட்சி தடையை ஏற்படுத்தியது. அதுபோல பிரதமர் மோடி கரோனாவைகாரணம் காட்டி மக்கள் நலப் பணிகளுக்கான நிதிகளை நிறுத்தி வைத்தார்.

மக்கள் நலப்பணிகளை செய்ய விடாமல் தடுத்த இரண்டு பேரும் தற்போது கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்க வந்துள்ளனர்.

தற்போதைய ஆட்சியில் வேலைவாய்ப்புகள் இல்லை. விவசாயிகளுக்கு பாதுகாப்பு கிடையாது. மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு புதிய சட்டங்கள் மூலம் பறித்துக் கொண்டி ருக்கிறது. திமுக கூட்டணி கட்சியினர் எதிர்த்த வேளாண் சட்டங்களையும், குடியுரிமை சட்டங்களையும் முதல்வர் பழனிசாமி தன்னையும், தனதுஅமைச்சர்களையும் காப்பாற்றுவதற்காக ஆதரித்தார்.

SCROLL FOR NEXT