சேலத்தில் மகன் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரது தாய் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சம்பூரணம் (44). இவர்களது மகன் அஜித்குமார் (21). ராஜா இறந்த நிலையில் மகனுடன் சம்பூரணம் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அஜித்குமார் சிறுமியைகாதலித்து திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் செவ்வாய்ப்பேட்டை போலீஸார் சம்பூரணத்திடம் விசாரணை செய்துள்ளனர்.
இந்நிலையில், சம்பூரணம் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந் தார். இதையடுத்து சம்பூரணத்தின் உறவினர்கள் போலீஸாரின் விசாரணையால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகக்கூறி காவல் ஆணையர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.