திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் கருப்பு பணம் இருப்பதால் வருமான வரித் துறை பற்றி கவலைப்படுகிறார் என பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பல் வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, “முதல்வர் பழனி சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப் பாக செயல்படுகின்றனர்.
வன்னியர் இடஒதுக்கீடு மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களின் கோரிக் கையை நிறைவேற்றியது வெற்றிக்கு வழி வகுக்கும். திமுக தேர்தல் அறிக்கையைவிட அதிமுக தேர்தல் அறிக்கை சிறப்பாக உள்ளது. திமுக ஆட்சியில் 16 மணி நேரம் மின் வெட்டு இருந்தது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மின் வெட்டு தொடரும். நாம், அவர்களை ஆட்சி அதிகாரத்துக்கு வர விடாமல் தடுக்க வேண்டும்.
திமுக என்றால் ஊழல்
உண்மையான நண்பர் யார்?
தமிழக மக்கள் கட்டப்பஞ் சாயத்து, நில அபகரிப்பை விரும்பவில்லை. ஆனால், திமுகவினர் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பை செய்பவர்கள். பாஜகவினரை அதிமுக அமைச்சர்கள் புறக்கணிக்கவில்லை. அவர்கள் எங்களை ஆதரிக்கின்றனர். நாங்கள் அவர்களை ஆதரிக்கின் றோம். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை அவர்கள் வரவேற்கின்றனர். எ.வ.வேலுவிடம் கருப்பு பணம் இருப்பதால், வருமான வரித் துறை சோதனையை பற்றி கவலைப்படுகிறார்.
கலாச்சாரம் என்றால் என்ன?