Regional02

60 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது :

செய்திப்பிரிவு

திருப்பூர் பொல்லிக்காளி பாளையத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் செல்வம் (31). இவர், கடந்த 5 மாதங்களாக திருப்பூரில் வாழ்ந்து வருகிறார். இவரது வீட்டில் ஊரக போலீஸார் நேற்று சோதனையில் ஈடுபட்டு 60கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் போலீஸார் விசாரித்ததில், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி சோமனூரை சேர்ந்த காசிராஜன் மூலமாக 60 கிலோ கஞ்சா கிடைத்ததாகவும், ஒரு வாரம் கஞ்சாவை வைத்திருக்குமாறும், ரூ.20 ஆயிரம் தருவதாகவும் அவர் கூறியதாக செல்வம் ஒப்புக்கொண்டார். ஊரக போலீஸார் வழக்கு பதிந்து செல்வத்தை கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள காசிராஜனை தேடி வருகின்றனர். கார், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT