கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தேர்தல் பறக்கும் படையினரால் கடந்த 20-ம்தேதி வரை ரூ.3.51 கோடி பணம்,பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் கிரண்குராலா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 மணி நேரமும் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள், மதுபானங்கள் விநியோகிப்பது, ரூ.50,000-க்கு மேல் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லும் பணம் மற்றும் இதர தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.11,93,110, ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.9,50,800, சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.10,93,850 மற்றும் கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.12,30,000 என மொத்தம் ரூ.44,67,760 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தவர்களிடம் உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.2,81,790 மற்றும் சங்கராபுரம்சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.7,25,350-ம் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 210 கொடிகள் மற்றும் 95 டி-ஷர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர்
பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப்பணம் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 2 கோடியே 5 லட்சத்து 52 ஆயிரத்து 944 ஆகும்.
விழுப்புரம்
தேர்தல் பறக்கும் படையினரால் கடந்த 20-ம் தேதி வரை ரூ.3.51 கோடி பணம், பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.