Regional01

கரோனா பரவலை தடுக்க தென்காசி ஆட்சியர் ஆலோசனை :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கரோனா வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆட்சியர் சமீரன் தலைமை வகித்து பேசும்போது, “தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் சமீப காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. வருவாய்த்துறை, பொது சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை மூலம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதும், தனிமனித இடைவெளியை பின்பற்றாததும், முகக்கவசம் அணியாததும் தான் கரோனா பரவுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. கரோனா வழிகாட்டுதலை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்துதான் வெளியில் செல்ல வேண்டும் ” என்றார்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங், மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், சுகாதார பணிகள் இணை இயக்குநர் அருணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT