Regional02

வாகன சோதனையில் ரூ.3.50 லட்சம் பறிமுதல் :

செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு பகுதி யில் தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, திருப்பத் தூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடி யிருப்புப் பகுதியைச் சேர்ந்த சுதாகர் (40) என்பவர் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தார். அவரை நிறுத்தி சோதனையிட்டபோது, அவரிடம் ரூ.3.50 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், நிலம் பத்திரப்பதிவு செய்ய பணத்தை கொண்டு செல்வதாக அவர் கூறினார். இருப்பினும், அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT