திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதி களில் 122 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தி.மலை மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி முடிந்தது. அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சுயேட்சைகள் என 187 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 20-ம் தேதி நடைபெற்றது. அதில், 145 பேரது வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. பின்னர், வேட்பு மனுக்களை திரும்பப்பெற நேற்று பிற்பகல் 3 மணி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதில், 23 பேர் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனர். இதையடுத்து, 122 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதையடுத்து, சுயேட்சை களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வந்தவாசி(தனி)
ஆரணி
செய்யாறு
போளூர்
செங்கம்(தனி)
திருவண்ணாமலை
கீழ்பென்னாத்தூர்
கலசப்பாக்கம்