Regional02

திருவண்ணாமலை மாவட்டத்தில் - 8 சட்டப்பேரவை தொகுதிகளில் 145 பேர் மனுக்கள் ஏற்பு : 42 வேட்பு மனுக்கள் தள்ளுபடி

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்த திமுக, அதிமுக வேட்பாளர்கள் உட்பட 145 பேர் மனுக்கள் ஏற்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத் தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஒரு வாரமாக வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என 187 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடை பெற்றது.

தேர்தல் பொது பார்வையாளர், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோரது தலைமையிலும், வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் மற்றும் அவர்களால் அங்கீகரிக் கப்பட்டவர்கள் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

தி.மலையில் கூட்டணி கட்சியான பாஜக போட்டியிடும் நிலையில் அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்பழகனின் மனு மீது பரிசீலனை நடைபெற்றபோது அதிமுக மற்றும் பாஜகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இறுதியில், உரிய நேரத்துக்குள் கட்சியின் அங்கீகார கடிதத்தை கொடுக்கவில்லை என கூறி அன்பழகன் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மற்ற இடங்களில் சிறு சிறு வாக்குவாதங்களுக்கு இடையே, வேட்பு மனு பரிசீலனை சுமுகமாக முடிவடைந்தது. ஆரணியில் அதிமுக வேட்பாளர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் திமுக வேட்பாளர் அன்பழகன் ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

செய்யாறு

வந்தவாசி

திருவண்ணாமலை

போளூர்

கீழ்பென்னாத்தூர்

கலசப்பாக்கம்

ஆரணி

செங்கம்

SCROLL FOR NEXT