Regional03

பறக்கும் படையினர் சோதனையில் புடவைகள் பறிமுதல் :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சோக்காடி கூட்ரோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு பறக்கும் படை அலுவலரும், பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலக உதவி பொறியாளர் பெரியசாமி தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் பரமசிவம், பெண் காவலர் பரமேஸ்வரி ஆகியோர் கொண்ட குழுவினர் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அவ்வழியே வந்த காரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர்கள் ராயக்கோட்டை - கெலமங்கலம் சாலையில் உள்ள கொட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கரமூர்த்தி (55) என தெரிந்தது.

மேலும், காரில் சோதனை செய்த போது, ரூ. 47 ஆயிரத்து 535 மதிப்புள்ள புடவைகள், சட்டைகள் உள்ளிட்ட துணிகள் இருந்தது தெரிந்தது. இதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் புடவை, சட்டைகளை பறக்கும்படை அலுவலர்கள் பறிமுதல் செய்து, கிருஷ்ணகிரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT