Regional03

திண்டிவனம் அருகே பறக்கும் படையினரால் ரூ.1.40 லட்சம் பறிமுதல் :

செய்திப்பிரிவு

திண்டிவனம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு பெருமுக்கம் கூட்டுச்சாலையில் பறக்கும் படை அலுவலர் சக்திவேல் தலைமையிலான குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 60 ஆயிரத்தை பறிமுதல் செய்து திண்டிவனம் கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதே போல திண்டிவனம் அருகே எரையானூரில் பறக்கும் படை அலுவலர் ராதா தலைமையிலான குழுவினர் நேற்று வாகனத் தணிக்கையில் அந்த வழியாக பைக்கில் வந்த எறையானூரைச் சேர்ந்த ரகுராமன் உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 80 ஆயிரத்தை பறிமுதல் செய்து வானூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT