Regional03

உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.5.50 லட்சம் பறிமுதல் :

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் அருகே பூதலூர் வட்டம் ஆவாரம்பட்டி பிரதான சாலையில் பறக்கும் படை அலுவலர் புனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, திருச்சியிலிருந்து பூதலூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த ஆச்சாம்பட்டியைச் சேர்ந்த பார்த்திபன்(22) என்பவரை நிறுத்தி சோதனை செய்தபோது, ரூ.5.50 லட்சம் ரொக்கம் கொண்டு சென்றது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், தனியார் வங்கியில் மக்கள் தொடர்பு அலுவலராக இருப்பதாகவும், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வழங்குவதற்காக பணத்தை எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார். ஆனால், அதற்குரிய ஆவணமில்லாததால், ரூ.5.50 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT