Regional03

செலவினப் பார்வையாளர்கள் 3 பேர் தூத்துக்குடி வருகை :

செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட 3 செலவினப் பார்வையாளர்கள் நேற்று வந்தனர்.

இதுகுறித்து ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை ஆய்வு செய்யவும், செலவினங்களை மேற்பார்வையிடவும் தேர்தல் ஆணையத்தால் 3 செலவினப் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி மற்றும் விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் செலவினப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள குண்டன் யாதவை செல்போன் எண் 9489947507-லும், திருச்செந்தூர் மற்றும் வைகுண்டம் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள ராகேஷ் தீபக்கை9489947508-லும், ஓட்டப்பிடாரம்மற்றும் கோவில்பட்டி தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள சுரேந்திர குமார் மிஸ்ராவை 9489947509-லும் தொடர்பு கொண்டுபொதுமக்களும் அரசியல் கட்சி யினரும் புகார் அளிக்கலாம்.

மேலும், தேர்தல் பார்வையாளர்களை அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் நேரில் சந்தித்தும் புகார் அளிக்கலாம், எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT