Regional02

730 கிலோ புகையிலை பறிமுதல் :

செய்திப்பிரிவு

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் நேத்தாராம்(26). இவர் திருப்பூர் பெருமாநல்லூர் சாலை பாண்டியன் நகரில் வசிக்கிறார். இவர் திருப்பூரின் பல்வேறு பகுதிகளுக்கும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார். இது குறித்து திருமுருகன்பூண்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் சோதனை நடத்தி, 730 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து, நேத்தாராமை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT