Regional01

ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 11-வது நாளாக போராட்டம் :

செய்திப்பிரிவு

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில், மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்ட ணமே இந்த ஆண்டிலிருந்து வசூலிக்கப்படும் என கடந்த மாதம்4-ம் தேதி தமிழக அரசு ஆணை வெளியிட்டது.

ஆனால் மாணவர்கள் கட்டணம் செலுத்தும் போது, ஏற்கெனவே வசூலிக்கும் பழைய கல்விக் கட்டணத்தை கட்ட வேண்டும் என கல்லூரி நிர்வா கம் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால், தமிழக அரசு அறிவித்த அரசு ஆணையின்படி கட்டணம் வசூலிக்க வலியு றுத்தி நேற்று 11-வது நாளாகமருத்துவக்கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பு மாணவ, மாணவிகள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

SCROLL FOR NEXT