திண்டிவனம் அருகே வீடூர் அணையில் நேற்று காலை ஒரு பெண் உடல் கிடப்பதாக விக்கிரவாண்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் உடலை மீட்டனர். அப்போது கரையில் இருந்த பையை சோதனைசெய்த போது கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அதில், இறந்தவர் விழுப் புரம் சாலமேடு ஞானசிகாமணி மனைவி கவிதா (48) என்று தெரியவந்தது.
அக்கடிதத்தில் கணவர் கொடுமை செய்வதாகவும், மகள் திருமணம் செய்துகொடுத்த இடத்தில் வாழாமல் வந்துவிட் டதாகவும், மகளையும் மருமகனையும் ஒன்று சேர்த்து வைக்க வேண்டும் எனவும் கவிதா குறிப்பிட்டு இருந்தார். கவிதாவின் உடலை போலீஸார் மீட்டுபிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக் கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மற்றொரு பெண் தற்கொலை