Regional02

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடி நடராஜ பிள்ளை தெருவில் வசித்து வருபவர் தனச்செல்வம்(63). ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான இவர், பிப்.17-ம் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு, நேற்று வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 41.5 பவுன் நகை மற் றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து மன்னார்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT