Regional02

கோயிலில் நகை, பணம் திருடிய 3 இளைஞர்கள் கைது

செய்திப்பிரிவு

கோயிலில் நகை, பணம் திருடிய 3 பேரை பரமத்தி காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் அருகே கீரம்பூர் சூரக்காபாளையம் நான்கு சாலை அருகே 3 பேர் மது போதையில் அவ்வழியாக செல்வோரிடம் தகராறில் ஈடுபடுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்த காவல் துறையினர் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மதுரை மாவட்டம் பெருங்குடியைச் சேர்ந்த ராஜூ (24), வண்டியூரைச் சேர்ந்த சூர்யா (23), வளையங்குலத்தைச் சேர்ந்த கருப்பசாமி (23) எனத் தெரியவந்தது. பரமத்தி சேத்துக்கால் மாரியம்மன் கோயிலில் நகை, பணம் மற்றும் வெள்ளிகிரீடம் திருடியதையும் ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்து மூவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT