Regional03

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் தி.மலையில் வெற்றியை ருசிக்காத அதிமுக 2021-ல் விடியல் பிறக்கும் என ரத்தத்தின் ரத்தங்கள் நம்பிக்கை

இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை சட்டப்பேரவை தொகுதி தேர்தல் வரலாற்றில் ஒரு முறை கூட அதிமுக வெற்றி பெறவில்லை என்பதால் 2021-ல் விடியல் பிறக்கும் என்ற நம்பிக் கையில் ரத்தத்தின் ரத்தங்கள் காத் திருக்கின்றனர்.

தமிழக தேர்தல் வரலாற்றில், திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதி 15 தேர்தல்களை சந்தித்துள்ளது. திமுக 9 முறையும், காங்கிரஸ் 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதில், கடைசியாக நடைபெற்ற ஐந்து தேர்தல்களில் (1996 முதல் 2016 வரை) வெற்றி வாகையை திமுக சூடியது. திமுக தொடங்கப்பட்ட நாள் முதல், திமுகவின் கோட்டை என அழைக்கும் அளவுக்கு தேர்தல் முடிவுகள் உள்ளன. ‘திமுகவுக்கு திருப்புமுனையை கொடுத்தது திருவண்ணாமலை’ என அண்ணா துரை மற்றும் கருணாநிதி போன்றவர்களால் பேசப்பட்ட வரலாறு உண்டு. அவர்களது உச்சரிப்பு, மு.க.ஸ்டாலின் மூல மாகவும் எதிரொலிக்கிறது.

திமுகவின் கோட்டை என அழைக்கப்பட்டு வரும் திருவண் ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில், அதிமுகவின் ‘இரட்டை இலை துளிர முடியாமல்’ உள்ளது. அதிமுக தொடங்கப்பட்ட பிறகு நடைபெற்றுள்ள 10 தேர்தலில் (1977 முதல் 2016 வரை), ஒரு முறை கூட அக்கட்சியானது வெற்றியை ருசிக்கவில்லை. இதில், அதிமுக 5 முறை போட்டியிட்டு தோல்வியை சந்தித்துள்ளது. 4 முறை கூட்டணி கட்சிக்கு விட்டுக் கொடுத்துள்ளது. இதில், 2 முறை (1984 மற்றும் 1991) கூட்டணி கட்சியான காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவு பட்டதால், 1989-ல் நடைபெற்ற தேர்தலில் இரட்டை இலை சின்னம் போட்டியிட வில்லை.

இந்நிலையில், தமிழகத்தில் 16-வது சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் மாலை அறிவித்துள்ளது. இத்தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை துளிர்ந்து, திமுகவின் கோட்டை என்ற சொல்லை தகர்த்தெறிய வேண்டுமென அக்கட்சியினர் விரும்புகின்றனர்.

உட்கட்சி பூசலால் படுதோல்வி

தகுதியானவரை களம் இறக்கவும்

விட்டு கொடுக்காதீர்...

SCROLL FOR NEXT