விழுப்புரத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் பாமகவினர். 
Regional02

வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு பாமகவினர் கொண்டாட்டம்

செய்திப்பிரிவு

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டப்பேரவையில் நேற்று மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து விழுப்புரம் பெருந்திட்ட வளாக நுழைவாயில் எதிரே பாமகவினரும் வன்னியர் சங்கத்தினரும் நேற்று மாலை பட்டாசு வெடித்து கொண்டாடினர். பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இனிப்புகள் வழங்கினர். பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் தங்க ஜோதி, வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் அன்புமணி, பாமக மாவட்டச் செயலாளர் புகழேந்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT