Regional02

ஆசிரியர்களுக்கு கரோனா தொற்றால் 2 பள்ளிகள் மூடல்

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம், உதகையில் அரசு உதவிபெறும் இரண்டு தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் தம்பதிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்தப் பள்ளிகளில் அனைத்து மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கும், சுகாதாரத் துறையினர் பரிசோதனை மேற்கொண்டனர். இரண்டு பள்ளிகளும் தற்காலிகமாக மூடப்பட்டன.

இந்நிலையில், ‘‘மாணவர்கள் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது. விரைவில் பள்ளிகள் திறக்கப்படும்’’ என மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT