தஞ்சாவூர் பூம்புகார் நிறுவனத்தில் முதன்முறையாக, புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. கண்காட்சியை தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் பு.ஜானகி ரவீந்திரன் தொடங்கிவைத்தார். பூம்புகார் நிறுவனத்தின் மேலாளர் கு.அருண் வரவேற்று பேசியதாவது:
கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்தும் விதமாக செயல்பட்டு வரும் பூம்புகார் நிறுவனம், டெல்லி, கொல்கத்தா உட்பட நாடு முழுவதும் 14 விற்பனை நிலையங்களை நடத்தி வருகிறது. இவற்றில் பல்வேறு கைவினைப் பொருட்களின் கண்காட்சிகளை நடத்தி, விற்பனையை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நாட்டிலேயே முதன்முறையாக புவிசார் குறியீடு பெற்ற கைவி னைப் பொருட்களை மட்டுமே கொண்ட சிறப்பு கண்காட்சி தஞ்சாவூர் பூம்புகார் விற்பனையகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
பிப்.28-ம் தேதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சி யில், சுவாமிமலை பஞ்சலோக சிலைகள், நாச்சியார்கோவில் குத்துவிளக்குகள், தஞ்சாவூர் கலைத்தட்டுகள், ஓவியங் கள், தலையாட்டி பொம்மை கள், நெட்டியிலான கைவினைப் பொருட்கள், தஞ்சாவூர் வீணைகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இங்கு ரூ.150 முதல் ரூ.65 ஆயிரம் வரையிலான பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. ரூ.3.5 லட்சத்துக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள பஞ்சலோக சிலைகள், குத்துவிளக்குகளுக்கு 20 சதவீதமும், பிற கைவி னைப் பொருட்களுக்கு 10 சதவீதமும் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது என்றார்.