தூத்துக்குடி அண்ணாநகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் ஆல்வின் ஜேக்கப்(23). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தனது மோட்டார் சைக்கிளை நேற்று முன்தினம் அண்ணாநகர் 1-வது தெருவில் உள்ள டீக்கடை அருகே நிறுத்தி விட்டு சென்றுள்ளார். இதனை யாரோ மர்ம நபர் திருடிச் சென்று விட்டார். தென்பாகம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.