காளையார்கோவில் அருகே பாப்பான் கண்மாயில் குளத்தில் மூழ்கி இறந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கிய அமைச்சர் ஜி. பாஸ்கரன். 
Regional02

சீமான் அரசை குறை சொல்லி என்ன ஆகப் போகிறது? அமைச்சர் ஜி.பாஸ்கரன் கேள்வி

செய்திப்பிரிவு

சீமான் போன்றவர்கள் அரசை குறை சொல்லி என்ன ஆகப் போகிறது எனக் கதர் கிராமத் தொழில்கள் நல வாரியத் துறை அமைச்சர் ஜி. பாஸ்கரன் தெரிவித்தார்.

காளையார்கோவில் அருகே பாப்பான் கண்மாயில் குளத்தில் மூழ்கி இறந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.20 ஆயிரத்தை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுக ஆட்சியில் தமிழகம் வெற்றி நடை போடாது என்று சீமான் சொல்லியுள்ளார். அவரைப் போன்றவர்கள் தமிழக அரசை குறை சொல்லி என்ன ஆகப் போகிறது?. குறை சொல்வதே எதிர்க்கட்சிகளின் வேலையாக உள்ளது.

தமிழகம் வெற்றி நடை போடுவதும், விவசாயிகளுக்கு அரசு வழங்கியுள்ள சலுகைகள் குறித்தும் மக்களுக்கு நன்றாகத் தெரியும். பயிர்க் கடன் தள்ளுபடி, பொங்கல் பரிசு ஆகியவற்றை அறிவித்ததால் அதிமுக வெற்றியை நோக்கிச் செல்கிறது. இதனால் எதிர்க்கட்சிகள் பொறாமைப்படுகின்றன.

பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றபோது இந்த ஆட்சி சில நாட்கள் கூட நீடிக்காது என நினைத்தனர். ஆனால், அதையெல்லாம் மீறி வீறு கொண்டு செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT