சேலம் மாவட்டத்தில் 3 இடங்களில் கிராமப்புற இளைஞர்கள், பெண்களுக்கு உணவு மற்றும் குளிர்பானம் தயாரித்தல், சிசிடிவி கேமரா பொருத்துதல் உள்பட பல்வேறு வகையான தொழில்திறன் பயிற்சி 16-ம் தேதி வழங்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் திறன் பயிற்சிக்கான பெருவாரியான அணி திரட்டல் மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 16-ம் தேதி, மாவட்டத்தின் 3 இடங்களில் தொழிற்திறன் பயிற்சி மேளா நடைபெற உள்ளது.
3 இடங்களில் பயிற்சி
ஏவிஎஸ். பொறியியல் கல்லூரி யில் நடைபெறும் மேளாவில், அயோத்தியாப்பட்டணம், சங்ககிரி, ஏற்காடு, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி வட்டாரங்களைச் சார்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.
பாரதியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் மேளாவில் வாழப்பாடி, பெத்தநாயக்கன் பாளையம், ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல் வட்டாரங்களைச் சார்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.
சில்லறை விற்பனை மேலாண்மை, உணவு மற்றும் குளிர்பானம் தயாரித்தல், கணக்கியல் உதவியாளர், நர்சிங் பயிற்சிகள், ஆய்வக உதவியாளர், பொது உதவியாளர், தையல் இயந்திர பயிற்சி, செக்யூரிட்டி பயிற்சிகள், டேலி பயிற்சி, அழகு கலை பயிற்சி, மருந்தக உதவியாளர், ஆட்டோ மொபைல் சர்வீஸ், வங்கி மற்றும் நிதி தொடர்பான சேவைகள், இளநிலை மென்பொருள் டெவலப்பர், பொறியியல் பயிற்சி, சிசிடிவி கேமரா பொருத்துதல், வெல்டிங் டெக்னீசியன், சூரிய தகடு பொருத்துதல், பொருட்கள் மற்றும் சேவை வரி, கணக்கியல் நிர்வாகி மற்றும் பொருட்கள் மற்றும் சேவை வரி உள்ளிட்டவற்றில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
தகுதிகள்