Regional01

மலட்டாறில் மணல் கடத்திய 4 பேர் கைது

செய்திப்பிரிவு

விழுப்புரம் அருகே மலட்டாறில் அரசு அனுமதியின்றி மணல் கடத்தல் நடைபெறுவதாக விழுப்புரம் தாலுகா போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று அதிகாலை போலீஸார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது மணல் கடத்தலில் ஈடுபட்ட சித்தாத்தூர் திருக்கையைச் சேர்ந்த கிருஷ்ணன்(44), கணேசன் (42),தளவானூர் அய்யனார்(37), வி அரியலூரைச் சேர்ந்த வெங்கடேசன் (45)ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 டிப்பர் லாரிகள், 1 டிராக்டர், 1 ஜேசிபி, 3 பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT