திருச்செந்தூர்- பரமன்குறிச்சி சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் நேற்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பனங்காட்டு மக்கள் கழகம் அமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.செல்வன் தலைமையில் பரமன்குறிச்சி பகுதி மக்கள் ஆட்சியர் கி.செந்தில் ராஜை சந்தித்து அளித்த மனு விவரம்: திருச்செந்தூரில் இருந்துபரமன்குறிச்சி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்றுவருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக திருச்செந்தூர்- பரமன்குறிச்சி சாலை மிகவும் மோசமான நிலையில், குண்டும் குழியுமாக உள்ளது.இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. திருச்செந்தூர்- பரமன்குறிச்சி சாலையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டுப்படகு மீனவர்கள்
திருநங்கைகள் மனு
இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்த திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.